பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-28 12:23 GMT

பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்னக ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்க் (எஸ்.ஆர்.இ.எஸ்.)சார்பாக  பொன்மலை ஆர்மரிகேட் முன்பாக பணிமனை கோட்ட தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமையில், உதவி பொதுச் செயலாளர் ரகுபதி முன்னிலையில் நடைபெற்றது.

இரயில்வே தொழிலாள சகோதர சகோதரிகளுக்கு இந்த வருட பி.எல்.பி. போனஸ் வழங்க கோரியும், புதிய உயர்த்தப்பட்ட இன்சென்டிவை உடனடியாக பொன்மலை பணிமனை தொழிலாளர்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும் தனியார் மயத்தை எதிர்த்தும் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், 18 மாத DA & DR ஐ அரியர்ஸாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

இதில் எஸ்.ஆர். இ.எஸ் நிர்வாகிகள் சுந்தர், மதி, ஸ்டீபன், ஏசுராஜ் , பாஸ்கரன், பாலமுருகன், ஞானசேகரன் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் பலர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News