திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டதால் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2021-12-03 11:17 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மறித்து கிருஷ்ணகுமார் (வயது 22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான கிருஷ்ணகுமார் மீது திருச்சி பாலக்கரை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கிருஷ்ணகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News