திருச்சி காந்திமார்க்கெட், எடலைப்பட்டிபுதூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-24 08:13 GMT

திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காந்தி மார்க்கெட் போலீசார் அந்த பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகர் அங்காளபரமேஸ்வரி கோயில் தெருவை சேர்ந்த சந்துரு (வயது 67) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதே போல் எடமலைப்பட்டிபுதூர் திருச்சி-மதுரை ரோட்டில் உள்ள செட்டியப்பட்டி பாலம் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எடமலைபட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அன்பில்நகரை சேர்ந்த சுதாகர் (வயது 26) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து அவரிடமிருந்து 1கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News