மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி .கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Update: 2021-11-26 14:56 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே அவ்வப்போது திடீர் திடீரென மழை பெய்து கொண்டே இருந்தது /மேலும் மாலை முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை (27.11.2021) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News