திருச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பற்றிய ஆய்வு கூட்டம்
திருச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.;
வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் பற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் சிவராசு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, கலெக்டர் பொது நேர்முக உதவியாளர் ஜெயப்ரீத்தா உள்பட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.