சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணை -அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

திருவெறும்பூர் ஒன்றியத்தில் சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

Update: 2022-05-19 14:41 GMT
திருவெறும்பூர் ஒன்றியத்தில் சத்துணவு சமையலர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சமையல் உதவியாளர் நிலையில் இருந்து சமையலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 25 பள்ளிகளில் சமையல் உதவியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு சமையலராக பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவெரும்பூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம் மற்றும் வட்டாரஅலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News