திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் 203 வாகனங்கள் பொது ஏலம்

திருச்சியில் குற்றம் மற்றும் விபத்து வழக்கு தொடர்புடைய 203வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

Update: 2021-09-30 06:45 GMT

திருச்சியில் ஏலம் விடப்படுவதற்கு முன் வாகனங்கள் வரிசயைாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற பிறகு பொது ஏலம் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த ஏலத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஏலத்தில் ஆம்னி வேன், கார்கள் என 4–நான்கு சக்கர வாகனங்களும்,

டி.வி.எஸ். 50, ஸ்கூட்டி விலையுயர்ந்த பைக்குகள் என 199–இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 203 வாகனங்கள் மைதானத்தில் ஏலத்திற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த ஏலம் தொடர்பாக காவல்துறை சார்பில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை முதல் ஏலம் எடுப்பவர்கள் முன் தொகையாக ரூ.2 ஆயிரம் பணம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை தேர்வு செய்து தங்களுக்கான வாகனங்களை ஏலம் எடுக்க மைதானத்தில் குவிந்தனர்.

Tags:    

Similar News