ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

திருச்சி அருகே ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த நபரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Update: 2022-01-02 16:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து திருச்சி வந்த தனியார் பேருந்தில் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(29)என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை காரைக்கால் வரிச்சிகுடி கிராமத்தை சேர்ந்த புருசோத்தமன்(23) என்பவர் பிக்பாக் கெட்அடித்துள்ளார்.கையும் களவுமாக பிடிக்கப்பட்ட அவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News