திருச்சியில் 5-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சியில் நடந்த ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

Update: 2021-10-10 16:53 GMT

திருச்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி  ஐந்தாம் கட்ட முகாமினை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி நகரில் 300 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி 5வது கட்ட முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமாக வந்து முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என் .நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்

Tags:    

Similar News