திருச்சி:பெட்ரோல்-டீசல் வரி குறைக்காததை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-11-22 15:00 GMT

பெட்ரோல் டீசல் மீதான வரி  குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மீதான  மாநில வரியை  குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் திருச்சி மரக்கடை அருகே இன்று  ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுதாகர் என்ற வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் கௌதம், மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, புறநகர் ராஜேஸ்வரி, முன்னாள் தலைவர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News