திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.;
திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சி எடத்தெரு காளியம்மன் கோவில் அருகில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் மோர் பந்தலை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இன்று திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இன்று சர்பத், மோர் மற்றும் தர்பூசணி பழங்கள், இளநீர் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.