திருச்சி ரிங்ரோடு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

திருச்சி ரிங்ரோடு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-04-08 15:29 GMT
திருச்சி ரிங் ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி ரிங்ரோடு அருகே இன்று மாலை ஐந்து நபர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ சென்றது.  பாரி நகர் பகுதியில்  ஆட்டோ வேகமாக சென்றபோது தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த  4 நபர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனைவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒருவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News