திருச்சி அரியமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-19 09:16 GMT

திருச்சி அரியமங்கலம் உக்கடை மலையடிவாரம் ஆட்டுக்கார தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.

அதில் 2 பேர் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட  விசாரணையில் அவர்கள் மலையடிவாரத்தை சேர்ந்த அப்பாஸ் அலி (வயது 22), மலையடிவாரம் சந்தைப் பேட்டையை சேர்ந்த சிவகாந்தன் (வயது 24) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே தலா 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News