திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-09 08:00 GMT

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 39). இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு  2 மகன்கள் உள்ளனர். நாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த பாக்கியலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது கணவர் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News