சிறுபான்மை இன மாணவர்களுக்கு திருச்சி கலெக்டர் சிவராசு வேண்டுகோள்

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-12-09 09:45 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ- மாணவிகளிடமிருந்து 2021-22-ஆம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov. in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News