போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்

போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.

Update: 2021-11-11 04:45 GMT

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த விஸ்வநாதனிடம் (வயது 30) அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் மீது கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News