திருச்சியில் 20 நாட்களில் லாட்டரி சீட்டு விற்ற 38 பேர் கைது

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றதாக 20 நாட்களில் 38 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2021-11-22 06:40 GMT

திருச்சி மாநகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்லவும், லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கவும், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் உறையூர் போலீஸ் நிலையத்தில் 7 பேர், கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையங்களில் 10 பேர், காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 16 பேர், கண்டோன்மெண்ட் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையங்களில் 4 பேர், அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் என மொத்தம் 28 வழக்குகளில் 38 பேர் கடந்த 20 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பணம், 7 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News