நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-01 06:10 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர்.

காரைக்கால் -எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது பான பாட்டில்கள் கடத்தப்படுவதாக ரெயில்யே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நாகப்பட்டினம்- திருச்சி இடையே அந்த ரெயிலில் திடீர் சோதனை போட்டனர். அப்போது அந்த ரெயிலில் கடத்தப்பட்ட 7 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News