புற்று நோயாளிகளுக்கு முடி தானம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு விருது

புற்று நோயாளிகளுக்கு முடி தானம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு திருச்சியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

Update: 2024-05-07 04:18 GMT

திருச்சி சட்டக்கல்லூரி மாணவிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு முடி தானம் செய்த சட்டக் கல்லூரி மாணவிக்கு முன்மாதிரியான பொது சேவை விருது வழங்கப்பட்டது.

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் மே தின விழா திருச்சியில் நடைபெற்றது. அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர சேகரன், சிநேகம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பால்குணா லோகநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் ஜெயராமன் சட்டக் கல்லூரி மாணவி கீர்த்தனா விஜயகுமார் புற்றுநோய் நோயாளிகளுக்கு முடி தானம் செய்தும் விழிப்புணர்வு செய்து வருவதை பாராட்டி முன்மாதிரியான பொது சேவை விருதினை வழங்கினார்.

இது குறித்து கீர்த்தனா விஜயகுமார் பேசுகையில்,‌ அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தாய், தந்தையுடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூந்தல் முடியை தானம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சவால்களையும், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் காரணமாக ஒருவரின் முடி உதிர்வதையும் எதிர்கொண்டாக வேண்டும்.

இது புற்றுநோயாளிகளுக்கு ஆழ்ந்த மன உளைச்சல் தரும். இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் செய்வதால்  நம்பிக்கை மற்றும் ஆதரவையும் ஆறுதலையும் வழங்கலாம்.

கீமோதெரபி, உடலுக்குள் வேகமாகப் பெருகும் புற்றுநோய் செல்களை குறிவைத்து அழிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த சிகிச்சையாகும். கீமோதெரபி மருந்துகளின் விளைவுகளால் புற்றுநோய் நோயாளிகள் படிப்படியாக அல்லது பெரும்பாலும் முடி உதிர்வதைக் காண்கிறார்கள். முடி உதிர்தல் உணர்ச்சி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்பத்தை ஏற்படுத்தும். முடி அழகு மற்றும் உயிர்ச்சக்தியைக் குறிக்கிறது

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் வழங்குவதன் மூலம் ஒரு அன்பான அரவணைப்பை வழங்கலாம்.இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு ஆதரவாக தலைமுடியை தானம் செய்வது எளிதானது. தலைமுடியை தானம் செய்வது சவாலான புற்றுநோய் சிகிச்சைகள் மூலம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இதயப்பூர்வமான வழியாகும். இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு உங்கள் தலைமுடியை தானம் செய்ய, முடி தானத்தில் நிபுணத்துவம் பெற்ற நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களின் வழிகாட்டுதல்படி முடி தானங்களை செய்யலாம்.

புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் செய்பவர்ஙள் புற்றுநோயாளிகளுக்கு முடி நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களை மருத்துவமனைகளை தேர்ந்து எடுத்துக் கொள்ளவும்.

தலைமுடியை தானம் செய்ய முடி 8 முதல்12 அங்குலம் நீளமாக இருக்க வேண்டும்.தானம் செய்வதற்கு முன் தலைமுடியைக் கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். புற்றுநோயாளிகளுக்காக தானம் செய்வதற்கான நோக்கத்தை சிகை அலங்கார நிபுணரிடம் தெரிவிக்கவும், சிகை அலங்கார நிபுணர்கள் 8 முதல் 12 அங்குலம் உள்ள முடி மேலும் கீழும் நடுவிலும் ரப்பர் பேண்ட் அணிந்து முறையாக முடியை வெட்டி தலைமுடியை ஜிப் லாக் பிளாஸ்டிக் பையில் வைத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கோ நிறுவனத்திற்கோ அஞ்சலில் அனுப்பினால் அவர்கள் அதற்கான சான்றிதழை வழங்குவார்கள்.

தலைமுடியை தானம் செய்வதன் மூலம், புற்றுநோயாளிகளின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றி மற்றவர்களை ஊக்குவிக்கவும். புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் செய்வது எப்படி என்பதை ஒவ்வொருவரும் எடுத்துரைக்க வேண்டும். புற்றுநோய் சிகிச்சையானது ஒரு வலிமையான போர், அதன் பயணம் சவாலானது. சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு, முடி உதிர்தல் அவர்களின் போராட்டத்தின் ஆழமான உணர்ச்சிகரமான அம்சமாக இருக்கலாம். புற்றுநோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்வது ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒரு நபரின் பங்களிப்பு கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், தானம் செய்யப்படும் தலைமுடியில் இருந்து விக் தயாரித்து புற்றுநோயாளிகளுக்கு வழங்குவார்கள். புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் செய்வது, புற்றுநோயாளிகள் எதிர்கொள்ளும் சவாலான பயணத்தில் நமது அன்பையும் மனித நேயத்தையும் குறிக்கிறது. சிகிச்சையின் காரணமாக முடி உதிர்வது அவர்களின் சுயமரியாதை அடையாளத்தை ஆழமாக பாதிக்கும். முடி தானம் செய்வது அர்த்தமுள்ளதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமையும். இத்தகைய முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், புற்றுநோயுடன் போராடுபவர்களின் வாழ்வில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

Tags:    

Similar News