வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கம்

திருச்சியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-03-15 15:52 GMT

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற சனிக்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் பற்றி பொதுமக்கள் மற்றும் படித்த இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மைய துணை இயக்குனர் மகாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News