அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31-ந்தேதி வரை நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-16 08:59 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆகிய வற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கை கடந்த மாதம் 30- ந்தேதிவரை நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது நேரடி சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News