திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-19 15:09 GMT

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை நபர்களை கட்டுப்படுத்தவும், வாகன தணிக்கை செய்தும், கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 27.04.22-ந்தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி பெரியார்நகர் அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை காரில் வைத்து விற்பனை செய்த  வைத்தான் (எ) சுதாகர்(எ) வர்கீஸ்ராஜா (வயது 42 )என்பவரை கைது செய்தும், அவரிமிருந்து சுமார் 2 கிலோ 250 கிராம் (மதிப்பு ரூ.22,500) கஞ்சாவை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்தும், கடந்த 24.04.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாமண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் (வயது 21 ).மீது வழக்குப்பதிவு செய்தும், சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் வைத்தான் (எ) சுதாகர் (எ) வர்கீஸ்ராஜா மீது 3 கொலை முயற்சி வழக்கும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக 15 வழக்கும், பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறித்த 10 வழக்கும், பொதுக்களை வழிமறித்து கொள்ளையடித்த 10 வழக்கும், 8 இதர வழக்கு உட்பட 45 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில்; நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் பொதுமக்களை அச்சுறுத்தி அரிவாள், கத்தி, பீர்பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக 4 வழக்கு உட்பட 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் வைத்தான்  மற்றும்  சுளுக்கி சுரேஷ் ஆகியோர் தொடா;ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை தொடர்ந்து விற்பனை செய்வதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும்  குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் இன்று வழங்கப்பட்டது.

Tags:    

Similar News