திருச்சியில் மனைவியை பிரிந்து வந்த ஏக்கத்தால் கணவன் தற்கொலை

திருச்சியில் மனைவியை பிரிந்து வந்த ஏக்கத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-15 14:30 GMT

திருச்சி, உய்யகொண்டான் திருமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (40), கூலித்தொழிலாளி. இவருக்கும் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.  மனைவி சத்யாவுடன் திருவையாறில் மாமனார் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியுடன் கோபித்துக் கொண்டு திருச்சி வந்த பத்மநாபன் கடந்த ஓரு ஆண்டாக இங்கு வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சரிவர வேலை கிடைக்காததால் அவதியடைந்த பத்மநாபன், மனைவியை பிரிந்து வந்த சோகத்தில் இருந்தவர் கடந்த 11-ஆம் தேதி விஷமருந்தி மயங்கினார்.

இதில் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட பத்பநாபன், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News