திருச்சியில் பெய்த மழையால் பாதாளசாக்கடை சுவர் இடிந்து விழுந்தது

திருச்சியில் நேற்று பெய்த மழையால் பாலக்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாதாளசாக்கடை சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2021-10-12 05:30 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல், இரவு நேரங்களில் லேசானது முதல் கனமழை வரை  பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் இருந்து இரவு வரை திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சாலையோரம் பாதாளசாக்கடை பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் சிலாப்புகள் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த சமயம் அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக இடிந்து விழுந்த கான்கிரிட் சிலாப்புகளை  ஊழியர்கள் அகற்றினர்.

Tags:    

Similar News