பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் சிவராசு விதிமுறைகள் அடங்கிய கையேட்டினை வழங்கினார்.

Update: 2022-05-17 16:05 GMT

பேரூராட்சி தலைவர்களுக்கான கையேட்டினை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் 14பேரூராட்சிகள் உள்ளன. இந்த 14பேரூராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு பேரூராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய  கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த கையேட்டினை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பேரூராட்சி தலைவர்களிடம் வழங்கினார். முன்னதாக இந்த கையேடு பற்றி அவர்களிடம் விளக்கி கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் காளியப்பன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News