திருச்சி: பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றவர் கைது

திருச்சியில் பழ வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-23 11:02 GMT

திருச்சி மேலசிந்தாமணி சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 41). இவர் என்.எஸ்.பி, ரோட்டில் சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது சிந்தாமணி பூசாரித்தெரு, அண்ணாநகரை தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 கேட்டு மிரட்டியதாக திருமுருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News