திருச்சி புத்தூரில் தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை

திருச்சி புத்தூரில் தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-23 13:52 GMT

திருச்சி புத்தூர் தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் உஷாராணி (வயது 42). இவரின் கணவர் சுரேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலமானார். இவர்களின் மகள் 11-ம் வகுப்பு படிக்கும் தனேஸ்வரி (வயது 16) என்பவர் தனது தந்தையின் மரணத்தினால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தை தாங்க முடியாத அவர் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News