திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு
Fast TANDCO-திருச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.;
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
Fast TANDCO-தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்சேர்ந்த விவசாயிகளுக்கு துரிதமின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதியதாக விண்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திருச்சி மாவட்ட ஆட்ச்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
2022-2023-ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரிதமின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லதுஅதிகப்பட்சமாக ரூ.3.60 இலட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும்பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்புவழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம்மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில்விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரிவிண்ணப்பத்திருக்க வேண்டும்.துரித மின் இணைப்புத்திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்பி (குதிரைத்திறன்) மின்இணைப்புக் கட்டணம் ரூபாய் 2.50 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூபாய் 25,000-ம் 7.5 எச்பி (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூபாய் 2.75இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூபாய் 27,500ம் 10 எச்பி (குதிரைத்திறன்)மின் இணைப்புக் கட்டணம் ரூபாய் 3.00 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகைரூபாய் 30,000ம் 15 எச்பி (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூபாய் 4.00இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூபாய் 40,000க் கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாதவிண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின்இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல் ”அ” பதிவேடு நகல், கிணறுஅல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில்பதிவுசெய்த இரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினைபதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2