திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர் உயிரிழப்பு

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Update: 2021-12-09 08:00 GMT

திருச்சி, உறையூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55 ). இவர் தனது உறவினர் வீட்டு கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அப்போது மது போதையில் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தட்டுத்தடுமாறி வீட்டிற்கு வந்த அவர்,  படுத்துவிட்டார்.

ஆனால்,  அதன் பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை; படுத்த படுக்கையாகவே உயிரிழந்துள்ளார். இது குறித்து, உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News