திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-24 07:59 GMT

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை மேலகிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 50). இவரது நண்பர் அதே பகுதி மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் மணி(எ)சுப்ரமணி (வயது 52). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இதில் சம்பவத்தன்று இரவு மது போதையில் இருந்த இருவரும் அப்பகுதியில் உள்ள அரிசி கடை முன் பிளாட்பாரத்தில் உறங்க சென்றனர்.

அப்போது இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பானது. அப்போது மணி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் முத்துகுமாரை குத்தினார். இதில் இடப்புற தலையில் காயமடைந்த முத்துகுமார், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மணியை கைது செய்தார்.

Tags:    

Similar News