திருச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் மீது தாக்குதல்

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில், அதிகாரி மீது நாற்காலியை வீசி தாக்கி விட்டு டிரைவர் தப்பி ஓட்டம்

Update: 2021-10-09 05:30 GMT

டிரைவரால் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்

திருச்சி மாவட்ட கோர்ட்டு வளாகத்தின் பின் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரியாக நாகை மாவட்டம் வெள்ளிபாளையம் சிவன்கோவில், மேலவீதியை சேர்ந்த சந்திரமோகன் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் திருச்சி பாலக்கரை கீழபுதூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 40) என்பவர் மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் வேனில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் டிரைவர் சந்திரசேகரிடம், வாகனத்தின் லாக்புக்கை கொண்டு வரும்படி சந்திரமோகன் கூறியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த டிரைவர், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து, அதிகாரியின் தலையில் ஓங்கி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில், தலையில் காயம் அடைந்த அவர், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் சந்திரசேகரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News