திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆணையர் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-29 16:32 GMT

திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்கள் உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் குடிநீர் மின் பாதை பராமரிப்பு பணிகள் 30- 11- 2011 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருப்பதால் மின் வினியோகம் இருக்காது.

எனவே ஸ்ரீரங்கம் முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகு பேட்டை, மகாலட்சுமி நகர் ,நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், செந்தந்நீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தா நகர், ஜே. கே. நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொனேரிபுரம் ,கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம் ,விமான நிலைய பகுதி ,காமராஜ் நகர், செம்பட்டு, காஜாமலை, கே. சாத்தனூர் ,கே .கே. நகர், தென்றல் நகர், ஆனந்த்நகர், சத்தியவாணி முத்து நகர், ஐயப்பன் நகர் மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர் மங்களா நகர் ,பாத்திமா நகர், ஜீவா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர் ,ஆனந்தம் நகர், பாரதி நகர் ,புதூர் பகுதி, எடமலைப்பட்டிபுதூர் அன்பு நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் நகர் பகுதிகளில் 30 -11 -2021 அன்று குடிநீர் வினியோகம் நடைபெறாது .மறுநாள் வழக்கம்போல் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News