திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.

Update: 2022-01-26 14:49 GMT

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில்  தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகத்தின் சார்பில் இன்று காலை இந்திய குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகத்தின் துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் வியாபாரக் கழகத்தின் செயலாளர் எம்.தங்கராஜ்,இணைச் செயலாளர் சீத்தாராமன் , பொருளாளர் கே.டி.தனபால் ஆகியோர் முன்னிலையில் நிர்வாக குழு உறுப்பினரும் திருச்சி நாகப்பா கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளருமான லெக்ஷ்மணன்  தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது  தேசிய கீதம் பாடப் பட்டது.

விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பத்திநாதன் , பாலசுப்பிரமணியன்,எழில் ஏழுமலை, பாலகிருஷ்ணன், மாரிமுத்து, கண்ணன், ஆசீர்வாதம், சுந்தரேசன்,சந்தான கிருஷ்ணன், மேலாளர் அருள், மற்றும்   உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .விழா முடிவில் பத்தி நாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News