திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் இன்று நடைபெற்றது.

Update: 2021-10-28 14:00 GMT

திருச்சி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருநாவுக்கரசர் எம்.பி, தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவெறும்பூர் சர்வீஸ் ரோடு, ஏர்போர்ட் ரன்வேக்கு அருகில் செல்லும் புதுக்கோட்டை சாலையின் உயரத்தை 3 அடி குறைப்பது, கிராமங்களில் 20நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்வருவது, தமிழக அரசு திட்டங்களை மாநகராட்சி குப்பை வண்டிகளில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரியபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி  விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்சிவராசு, திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் இனிகோஇருதயராஜ், மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News