திருச்சி உறையூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருச்சி உறையூரில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பார்வையிட்டார்.

Update: 2022-08-07 10:31 GMT

திருச்சி உறையூரில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் பார்வையிட்டார்.

திருச்சி  மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 600 க்கும் மேற்பட்ட  இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.  வார்டு எண்23ல் உறையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்ற முகாமினை மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் பார்வையிட்டார்.

Tags:    

Similar News