திருச்சி: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை முதல் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-02 09:53 GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி பெருநகர மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் டிசம்பர்-2021 மாதம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. முசிறி கோட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), துறையூர் கோட்டத்தில் 7-ந் தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 10-ந் தேதியும், லால்குடி கோட்டத்தில் 14-ந் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் 17-ந் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் 21-ந் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 28-ந் தேதியும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே இந்த மாதத்தில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News