திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

Update: 2022-07-03 05:48 GMT

திருச்சியில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 19 முதல் 50 வயது வரையிலான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News