திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கம்

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-03-21 16:46 GMT

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால்  தூர்வாரும் பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55, புதிய வார்டு எண் 23, காந்திபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள சக்தி மாரியம்மன் நகர் வழியாக தேவர் காலனி சொல்லும் மழைநீர் வடிகால் பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்தது.

இதனை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி இன்று துவங்கியது. இப்பணியினை வார்டு எண் 23, மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் துவக்கி வைத்தார். மாநகராட்சி சிறப்பு தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News