திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சியில் உய்ய கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

Update: 2022-05-17 16:46 GMT

திருச்சி கீழக்குறிச்சி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் நீர்வள ஆதார துறையின் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் மற்றும் அரியாறு வடிநில கோட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ரூ.18கோடி திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

திருச்சி உய்ய கொண்டான் வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News