திருச்சியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற செஸ் போட்டி

கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப் போட்டி இன்று துவங்கியது.

Update: 2021-12-11 15:30 GMT

திருச்சியில் நடைபெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டி.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப் போட்டி இன்று துவங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் அருள்தந்தை பிரிட்டோ துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை சிகரம் சமூக பல்நோக்கு சேவை மையம் மற்றும் வெற்றி பொதுநல சங்கம் இணைந்து நடத்தி வருகின்றனர். 6 சுற்றுகள் முறையில் இந்த போட்டி நடைபெற்றது.

இது குறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து ஒரு சில வீரர்கள் பங்கேற்றாலும், தமிழகத்தில் கிராமங்களில் முடங்கிக் கிடக்கும் விளையாட்டுத் திறன் அதிகம் உள்ள மாற்றுத் திறனாளிகளை, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் மூலம் அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மாவட்டம் தோறும் சிறப்பு விளையாட்டு திறன் பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News