திருச்சி மாநகராட்சி 5 மண்டல குழு தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி 5 மண்டல குழு தலைவர் பதவிக்கான தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-29 16:57 GMT

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு 5 மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த மண்டல குழு தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

அந்த பட்டியல் இதோ...

மண்டலம்-1  -ஆண்டாள் ராம்குமார்

மண்டலம்- 2 -பி.ஜெயநிர்மலா

மண்டலம்- 3 -மு .மதிவாணன்

மண்டலம்- 4 -டிதுர்காதேவி

மண்டலம்- 5 -விஜயலட்சுமி கண்ணன்

Tags:    

Similar News