திருச்சியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அறக்கட்டளை சார்பில் உதவி

திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் எடமலைப்பட்டிபுதூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-10-12 12:14 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவில் உள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் சுகாதாரத்திற்காக சோப் வழங்கப்பட்டது.

இதில் அறக்கட்டளை நிறுவனர் பா.ஜான் ராஜ்குமார் ,கெளரவத் தலைவர் பா.ரவி, சேகர் சாமி, டேவிட், பரமானந்தம் மற்றும் ஊர் பிரமுகர்கள் ராஜலிங்கம், பாலன், இளங்கோ அங்கன்வாடி மைய ஆசிரியைகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News