திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அ.தி.மு.க. விருப்ப மனு

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது.

Update: 2021-11-26 16:02 GMT

திருச்சி  மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வாங்கினார்.

அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பெறப்பட்டது.

இந்நிகழ்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை தாங்கி அ.தி.மு.க. நிர்வாகிகளிடமிருந்து தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து அதற்கான விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகுமார், ஜவகர்லால் நேரு, பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, பூபதி, நாகநாதர் பாண்டி, அன்பழகன், சுரேஷ் குப்தா நிர்வாகிகள் சஹாப்தீன், இலியாஸ், அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி  28-ந்தேதி மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இதில் மாநகர் மாவட்ட பகுதியில் உள்ள நிர்வாகிகள் அதற்கான தொகை ரூ 5 ஆயிரத்தை கட்டி நேரில் பெற்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News