திருச்சியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-31 14:28 GMT

திரிபுரா சம்பவத்தை கண்டித்து திருச்சியில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தின் கைலாஷ் நகர செயலாளர் ஸ்ரீ.சிபாஜி  கத்தியால் குத்தி தாக்கப்பட்டதை கண்டித்தும், இது போன்ற தேசவிரோத செயல்களில் ஈடுபடகூடிய தேசவிரோதிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்  இன்று மாலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஏ.பி வி பி. அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் தமிழக மாநில செயலாளர் சுசிலா தலைமை தாங்கினார்.திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் முன்னிலை வகித்தார். இதில் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News