8 மணி நேர வேலை பறிப்பு: திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி.கண்டன ஆர்ப்பாட்டம்
8 மணி நேர வேலை பறிப்பு கண்டித்து திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 மணி நேர வேலை பறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் திருச்சியில் ஏப்ரல்21ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்தியாவில் தற்போது ௮ மணி நேர வேலை திட்டம் அமலில் உள்ளது. இதனை மத்திய அரசு ௧௨ நேரமாக மாற்றி வருகிறது. இதற்கு நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
8 மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் நினைவாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதல் முறையாக மே தினத்தை 1923ல் கொண்டாடினார். அதன் நூற்றாண்டு நிறைவு இந்த மே தினம். அதே கடற்கரையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா இன்று நிறைவேற்றப்படட்டு உள்ளது.
இது தமிழ்நாடு அரசுக்கு அழகல்ல என கூறியும், தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் தொழில் மையங்களில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி திருச்சி மாநகரில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அபுதாகிர், சுரேஷ் முத்துசாமி, சொக்கி என்கிற சண்முகம், சந்திர பிரகாஷ், நிர்மலா, கதிர் வடிவேல், செம்பட்டு ராஜா முன்னிலையில் மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் தலைவர் நடராஜா பொருளாளர் ராமராஜ் துணைத் தலைவர் சிவா போக்குவரத்து பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கன்டன உரையாற்றினர். இறுதியாக கொடாப்பு சுமதி நன்றி கூறினார்.