திருச்சியில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்

திருச்சியில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-06-19 12:46 GMT

திருச்சி அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் 20பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி அருகே உள்ள கிளிய நல்லூரில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கி இன்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருவானைக்காவல் மாம்பழச்சாலை அருகே வந்த போது அந்த பஸ் திடீர் என டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ,பயணிகள் உள்பட 20பேர் காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News