திருச்சி கே.கே.நகரில் 4 வயது பெண் குழந்தையுடன் தாய் மாயம்

திருச்சி கே.கே.நகரில் 4 வயது குழந்தையுடன் மாயமான தாயை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-19 10:15 GMT

திருச்சி கே.கே.நகர் சேஷாய்நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 34). இவரது மனைவி பூமாரி (வயது 30). இவர்களுக்கு பிரியங்கா என்கிற 4 வயது மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வருவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவரிடம் கோபித்து கொண்டு பூமாரி தனது மகள் பிரியங்காவுடன் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். பல இடங்களில் ஐயப்பன் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாரி அவரது மகள் பிரியங்கா ஆகிய 2 பேரையும்  தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News