துறையூர் அருகே கிணற்றில் விழுந்தவரை மீட்க இறங்கிய 2 பேர் தவிப்பு
திருச்சியில் கிணற்றில் விழுந்தவரை மீட்க இறங்கிய 2 பேர் ஆபத்தில் சிக்கினர். அவர்களை தீயணைப்புதுறையினர் காப்பாற்றினர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நல்ல வன்னிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆழமான கிணற்றில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தவறி விழுந்து விட்டார். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு கூடினர்.அப்போது இளைஞர்கள் சிலர் கிணற்றுக்குள் விழுந்தவரை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கினார்கள். நீண்டபோராட்டத்திற்குப் பின்னர் கிணற்றில் விழுந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கிய நல்லவன்னிப்பட்டி மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த ராசு (வயது 33),தெற்கு தெருவைச் சேர்ந்தகாமேஷ்வரன் (வயது 24) ஆகியோர்மேலே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.அவர்களை பொதுமக்களும் மீட்கமுடியவில்லை. தகவலறிந்ததுறையூர் தீயணைப்பு நிலையவீரர்கள் விரைந்து சென்று கயிறு,நாற்காலி, கட்டில் போன்றவற்றை பயன்படுத்தி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.