துறையூர் தாசில்தாரிடம் லஞ்சஒழிப்பு போலீஸ் என கூறிய நபரால் பரபரப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி என்று கூறி துறையூர் தாசில்தாரிடம் போனில் பேசிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-21 07:34 GMT

துறையூர் தாசில்தார் ஆக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்கு புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி பேசுவதாகவும், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விசுவாம்பாள் சமுத்திரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் கைது செய்யப்பட்டதாகவும், கூறியுள்ளார்.

இதையடுத்து தாசில்தார் ரமேஷ், அந்த கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். இதில் தன்னை தொடர்பு கொண்ட மர்ம நபர் பொய்யான தகவலை கொடுத்தது, தாசில்தாருக்கு தெரியவந்தது. இது குறித்து அவர், துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News