குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவத்தில் சிறுமியை தொடர்ந்து தாயும் சாவு

உப்பலியபுரம் அருகே குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவத்தில் சிறுமியை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.

Update: 2021-12-20 05:47 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி(வயது 36). இவர் சோபனபுரத்தில் இருந்து பூஞ்சோலையம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள காட்டுக்கொட்டகையில் வசித்து வந்தார். இவரது கணவர் விஜயகுமார் கடந்த 6 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து மனவளர்ச்சி குறைபாடுள்ள லித்திகா(7), லித்தீஸ்(7) ஆகிய இரட்டைக் குழந்தைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தவர், சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்தார். இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி லித்திகா கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தாள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி நேற்று உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள லித்தீசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News